tamilnadu

img

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை உ.பி.குளத்தில் சடலமாக மீட்பு

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி உ.பி. பகுதியில்  கிராம குளத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு  செய்யப்பட்டு கழுத்தை நெரிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்நிலையில் குளத்தில் சடலமாக சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமியின் சடலம் திங்களன்று அசாம்கார் கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு குளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் குடும்பம் முழுவதும் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை முதல் சிறுமியை காணவில்லை. இது குறித்து முபாரக்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதில், அப்பகுதி இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாகவும், விரைவில் இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குடும்ப உறவினர்களே பாலியல் வன்புணர்வு  செய்து கொலை செய்த பின்னர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.  சனிக்கிழமை, கோரக்பூர் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி இரண்டு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட் தீயால் துன்புறுத்தியுள்ளனர். அந்த சிறுமி சனிக்கிழமை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது அதே மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.